முன்கூட்டியே தெரிந்துதான் கார்டு வாங்குகிறார்கள்
கிரெடிட் கார்டு பாக்கி மீது வங்கிகள் 30 சதவீத வட்டி வசூலிக்கலாம்
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
புதுடெல்லி, டிச.27- 2024
கிரெடிட் கார்டு பாக்கி மீது ஆண்டுக்கு 30 சதவீ தத்துக்கு மேல், வட்டி வசூலிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
அளித்துள்ளது. நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு
கிரெட்டி கார்டு (கடன் அட்டை) மூலம் பரிமாற்றம் செய்ததொகையை கிரெடிட் கார்டு வழங்கிய வங்கிக்கு செலுத்துவதில் பாக்கி வைப்ப வர்களிடம் ஆண்டுக்கு 30 சத வீதத்துக்கு மேற்பட்ட வட்டி வசூலிக்கப்படுகிறது.
அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம், 36 சதவீதம் முதல் 49 சதவீதம் வரை வட்டி வசூலிப்பது மிகவும் அதிகம் இது வாடிக்கையாளர்களிடம் சுரண்டுவதை போன்றது, நியாயமற்ற வர்த்தக நடவ டிக்கைக்கு அதிகாரம் இல்லை. என்று கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 7-ந்தேதி தீர்ப்பு அளித்தது.
ரத்து
இதை எதிர்த்து, சிட்டி பேங்க், எச்.எஸ்.பி.சி. உள்ளிட்ட வங்கிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன.
அந்த மனு, நீதிபதிகள்பேலா எம்.திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது.
விசாரணை முடிந்தநிலையில், 16 ஆண்டுகளுக்கு முந்தைய தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு:-
நியாயமற்ற ஒப்பந்தங்களையும், தன்னிச்சையாக அறிவிக் கப்படும் நிபந்தனைகளையும் ரத்து செய்ய தேசிய நுகர் வோர் குறைதீர்ப்பு ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், வங்கிகளால் நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம், கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கப்ப டுகிறது. எனவே, அதில்தலை யிட நுகர்வோர் ஆணையத்துக்கு உரிமை இல்லை.
நன்கு படித்தவர்கள்
30 சதவீதத்துக்கு மேல், வட்டி வசூலிப்பது நியாய மற்ற செயல் என்று ஆணை யம் சொன்னது சட்ட விரோதம். அது, ரிசர்வ் வங்கி அதிகாரத்தில் குறுக்கிடும் செயல். மேலும், 1949-ம் ஆண்டின் வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் நோக்கத்துக்கு எதிரானது.
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள், நன்கு படித்தவர்கள். உரிய நேரத்தில் பணம் செலுத்த வேண்டும், தாமதம் ஏற்பட்டால் அபராதம் செலுத்த வேண்டும் என்று தங்கள் கடமைகளையும், உரி மைகளையும் அறிந்தவர்கள்.
கிரெடிட் கார்டு அளிக்கும் போது, வட்டி விகிதம் உள்ள ளிட்ட முக்கியமான நிபந்தனைகளும், விதிமுறைகளும் அவர்களுக்கு சொல் லப்படுகின்றன. அவர்களும் வெளிப்படையாக சம்மதம் வெளிப்படையாக
அதிகாரம் இல்லை
இருதரப்பும் ஒப்புக் கொண்ட நிபந்தனைகளை மாற்றி அமைக்க நுகர்வோர் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. எனவே, வட்டி விகி தத்தை ஆய்வு செய்வதை நுகர் வோர் ஆணையம் தவிர்த்து இருக்கலாம். ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவுக்கு முர ணாக எந்த வங்கியும் செயல் பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தி உள்ளது.
வட்டிக்கு உச்சவரம்பு நிர் ணயிக்குமாறு ரிசர்வ் வங் கிக்கு உத்தரவிட முடியாது. கிரெடிட் கார்டு பாக்கிக்கு வங்கிகள் 30 சதவீதத்துக்கு மேல், வட்டி வசூலிக்கலாம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறி